Thursday, July 31, 2008

31.07.2008 இன்றைய பங்குத்தகவல்

பங்கு சந்தையைப் பாதிக்கக்கூடிய உள்நாட்டுக்காரணிகள் பெரியதாய் எதுவும் இல்லை. பணவீக்கமும் 12 சதவீதத்துக்கு அருகில்தான் இருக்கு. முந்தாநாள் நடந்த மத்திய ரிசர்வ் வங்கி வட்டிவீதம் உயர்வு, சி.ஆர்.ஆர் உயர்வு போன்றவை கடந்த 2 மாதமாவே எதிர்பார்த்ததுதான். அதற்க்குச் சந்தை இப்படி பெரிய எதிர்வினை(சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைவு) செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. வியாபாரிகள் "ஷார்ட் செல்" பண்ணியிருக்காங்க போல. நேத்து அதற்க்கு "கவர்" செய்ததால் சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்ததாம்.

இப்போது உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளை குறைந்த விலையில் நஷ்டத்துக்காக என்றாலும் விற்றுவிட்டு வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம்போல இருக்கு.

ஏதாவது நல்ல பங்கு திடீரெனென்று மிகக் குறைந்த விலைக்குக் கிடைத்தால் வாங்கி சில நாட்கள் வைத்திருந்து பார்கலாம். நேற்று முந்தினம் சன் டிவி சுமார் 15 சதவீதம் குறைந்து ரூ.330 என்ற அளவில் கிடைத்தது.

கேர்ன் போன்ற பெட்ரோலியப் பங்குகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம்.

Tuesday, July 8, 2008

08.07.2008 இன்றைய பங்குத்தகவல்

சென்செக்ஸ் 12500,12000வரை போகுமாம். அதனால கொஞ்ச கொஞ்சமா பங்குகளை, முக்கியமா ஏ குரூப் பங்குகளை வாங்கணுமாம்.சந்தை மேலேறும்போது லாபம் வருமாம். என்னைத்த வாங்கறது? ஏற்க்கனவே எல்லாத்தையும் வாங்கியாச்சு. அப்ப சந்தை மேலேறும்வரை பார்த்திட்டு இருக்க வேண்டியதுதான்.

சந்தையை மேலேற்றுவதற்க்கான வலுவான காரணம் ஓண்ணும் இப்போ இல்ல. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தினமும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சென்செக்ஸ் 13000க்கு கீழே இறங்கும்போது உள்/வெளிநாடு முதலீட்டாளர்கள் கொஞ்சம் வாங்குறாங்க. அமெரிக்க "டோ ஜோன்ஸ்" 10,000ஐ தொடும்னு பயம் காட்றாங்க. கச்சா எண்ணெய் இப்பத்தான் பீப்பாய்க்கு 141 டாலருக்கு வந்திருக்கு.சர்வதேச பங்குச் சந்தையில அடி வாங்கினவங்கள்ளாம் கமாடிடி(கச்சா எண்ணை)க்கு போய்ட்டாங்களாம். அப்போ சர்வதேச கமாடிடி சந்தைக்கு ஒரு அடி இருக்குன்னு சொல்றாங்க கச்சா எண்ணை பீப்பாய்க்கு 100 டலருக்கு வந்து நிற்க்குமாம். வரும் 10ஆம் தேதி அளவில் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவ அறிவிக்க ஆரம்பிச்சதும் சந்தை மேலேரலாம்னு சொல்றாங்க. இந்தியா கம்பெனிகள் "நல்ல ஆரோக்கியமா" - அடிப்படை வலுவா இருக்கறதால ஒண்ணும் கவலைப்பட வேண்டாமாம். அதான், ஸ்டீல் போன்ற பொருட்களின் விலையை கன்னா பின்னானு ஏத்திடுறாங்களே(ஸ்டீல் விலை 3 மாதத்தில் டன்னுக்கு விலை ரூ.30,000 லிருந்து ரூ.45000/50000ஆ ஏத்திட்டாங்களாம்). பிறகு கம்பெனிகளுக்கு எப்படி லாபம் குறையும்?

என் நண்பரொருவர் தரகு வலைத்தளத்தில் லாகின் செய்ய முயன்றார். அவருக்கு தன் பாஸ்வோர்ட் மறந்துவிட்டது. உடனே அருகிலிருந்த மற்றொரு நண்பர் இன்று "பிஸினஸ் லைனில்" வந்த ஜோக்கை காண்பித்து சிரித்தார். அந்த ஜோக் "திரு.ராவ்தான் மிகச் சிறந்த முதலீட்டாளர். ஏனென்றால்,அவர்தான் தன் தரகு வலைத்தளத்தில் தன்னோட பாஸ்வோர்டை மறந்து விட்டார்" =)))