Monday, December 24, 2007

24.12.2007 இன்றைய தகவல்

கடந்த வெள்ளியன்று அமெரிக்க பங்குச் சந்தை நன்றாக முடிந்திருப்பகால்,அதன் தாக்கத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தையும் 200 - 400 புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்த்ததுதான். ஆனால்,இவ்வளவு புள்ளிகள்(691) உயரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மென்பொருள் பங்குகள் (சத்யம்,விப்ரொ,டிசிஎஸ்,இண்ஃபோசிஸ்) நிறைய உயர்ந்ததால்தான் சென்செக்ஸ் இவ்வளவு புள்ளிகள் கூடியது போலும்.இன்ஃபோசிஸ் 4வது காலாண்டு அறிக்கை தாக்கல் செய்யும்வரை இந்த உயர்வு தொடரலாம்.

மேற்கத்திய நாட்டவர்க்கு இந்த மாதம்தான் ஆண்டுக்கணக்கு முடியும் மாதம். அதனால்,லாபத்தை உறுதி செய்வதற்க்காக அவர்கள் பங்குகளை விற்ப்பார்கள் என்ற விற்ப்பன்னர்கள் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு சரி என்பது போகப்போகத்தான் தெரியும்.

டாட்டா மோட்டார்ஸ்
டாட்டா மோட்டர்ஸ் ஃபோர்டின் "ஜாகுவர் - லேண்ட்ரோவர்" கையப்படுத்துதலை அடுத்து, அதற்க்கு டாட்டா மோட்டர்ஸ் கொடுக்கும் விலை 200 கோடி டாலர்கள் மிக மிக அதிகம் என்று "செய்திகள்"(வதந்தி) வருகின்றன். அதனால் வரும் நாட்களில் டாட்டா மோட்டர்ஸின் பங்கின் விலை குறையக்கூடும். இப்படித்தான்,டாட்டா ஸ்டீல் கோரஸை கையகப்படுத்தும்போதும் நடந்தது. நானும் இன்னும் கொஞசம் இந்தப் பங்குகளை வாங்கலாம் என்று இருக்கிறேன். மேலும்,எல்லாக் கார் நிறுவங்களும் உன்னிப்பாய் கவனிக்கும் டாட்டாவின் ரூ.1 லட்சம் கார், ஜனவரி 10ஆம் தேதிய இந்திய ஆட்டோமொபையில் கண்காட்சியில் காண்பிக்கப்படும் என்று தெரிகிறது.

Friday, December 21, 2007

21.12.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க

இண்டியா சிமெண்ட்

இண்டியா சிமெண்ட் ரூ.592 கோடி அளவில் கடன் வாங்குகிறார்கள், நிறுவன விரிவாக்கத்துக்கு. அடுத்த ஆண்டு மத்தி வாக்கில் இண்டியா சிமெண்டின் உற்ப்பத்தி இரண்டு மடங்காகுமாம். 40 - 50 மெகாவாட் மின் உற்ப்பத்தித்திறன் உள்ள மின்னாலை அமைக்கப் போகிறார்களாம். எரிபொருளுக்கான மூலப்பொருள் நிலக்கரியை கடல் வழியாக இறக்குமதி செய்ய தனியாக கப்பல் வாங்கப் போகிறார்களாம். மின்சார செலவும்,போக்குவரத்துச் செலவும் குறைந்தால் லாபம் அதிகரிக்குமாம். இண்டியா சிமெண்ட் பங்கு வைத்திருப்பவர்கள் அடுத்த காலண்டு அறிக்கை வருவதற்கு முன் விற்று லாபம் பார்க்காலாம். மீண்டும் அது 250 260 என்று வரும்போது வாங்கிப்போடலாம்

21.12.2007 இன்றைய தகவல்

15ஆம் தேதித்க்குப்பின் சந்தை இறங்கும் என்று செய்திகளில் சொல்லப்பட்டபடியே சந்தை ஒரே நாளில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்கிறது.
இப்படித்தான் தீபாவளிக்கு முன்பும் சொன்னார்கள். சந்தை இறங்கியது. தீபாவளி முடிந்ததும் ஒரே நாளில் சென்செக்ஸ் 900 புள்ளிகளூக்குமேல் தாண்டியது. அதாவது, தீபாவளிக்குப்பின் குறையும் என்று கையில் பங்கு இல்லாமலே விற்று(short selling) வைத்தார்களாம். பின் சந்தை எதிர்பார்த்த அளவு விழாது என்றவுடன் விற்ற பங்கையே வாங்கி(short covering) கணக்கை நேர் செய்தார்களாம்.


இவர்கள் சந்தை இப்படித்தான் போகும் என்று ஆருடம் சொல்வதைவிட இப்படித்தான் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்கேற்றார்போல் பங்குகளை வாங்கியோ விற்றோ லாபம் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.

டாட்டவுக்கு ஃபோர்டின் ஜாகுவார்,லேண்ட் ரோவர் விற்பனை பற்றிய அறிவிப்பு திங்களன்று வருமாம். ஆனல்,அதிகரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 2வது வாரத்தில்தான் வருமாம். இப்போது டாட்டா மோட்டர்ஸின் பங்கு விலை ரூ.705ல் இருக்கிறது. கொஞ்சம் பங்குகளை வாங்கியிருக்கிரேன்.

மத்திய அரசின் MRTPC அமைப்பு 1990ல் சிமெண்ட் நிறுவங்கள் தமக்குள் பேசி வைத்துக்கொண்டு விலையை கூட்டினவாம் !!!! இது பெரிய கண்டுபிடிப்பு. 18 வருடங்களில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் அந்த நிறுவங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். இது ஒரு எச்சரிக்கை. அவ்வளவே. சாதாரணமா இந்த மாதிரி அறிவிப்புகள் வந்தால் சிமெண்ட் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 10% வரை குறையும். ஆனால்,இபோது அப்படி எதுவும் நடக்காது என்று நம்பலாம்.

இப்போது மிட்கேப்,ஸ்மால்கேப் பங்குக்குத்தான் இப்போது கிராக்கி. கேப்பிடல் கூட்ஸ் பங்குகளுகு அவ்வளவு கிராக்கி இலை. பி ஹச் இ எல்லின் பங்குகள் ரூ.2371ல் இருக்கிறது. இதற்க்குமேல் கீழிறங்கும்னு தோணலை.வாங்க நினைத்திருந்தால் வாங்கலாம்.

மத்திய அரசு, அரசு நிறுவனங்கள் தன்னிடம் உள்ள உபரி நிதி மொத்த முதலீட்டை விட 3 மடங்கு அதிகமாக இருந்தால் அதற்க்கு முதலீட்டாளர்க்கு போனஸ் பங்கு கொடுக்கச் சொல்லியிருக்காங்க. எல்லா அரசு நிறுவங்களூம் 20,30 மடங்கு என்றூ உபரி நிதி வைத்திருக்கிராற்களாம். அதனால்,இந்தப்பங்குக்கும் போனஸ் கிடைக்கலாம்.

எஸ்ஸார் ஷிப்பிங்க் என்று ஒரு பங்கு 4 வாரங்களுக்குமுன் ரூ.50 என்ற அளவில்இருந்தது. அப்போது வாங்கப் பணம் இல்லை. இப்போது, அந்தப்பங்கு ரூ.124ல் இருக்கிறது.

இவ்வளவு களேபரத்திலும் பிரகாஷ் இண்டஸ்ட்ரியின் பங்கு கீழே விழவேயில்லை.

Monday, December 17, 2007

17.12.2007 இன்றைய தகவல்

பங்குச்சந்தையில் ரத்தக்களரி!!!

சென்ற வாரம் என் நண்பரிடம் அடுத்த வாரம் 15ம்தேதி பங்கு சந்தை குப்புற விழப்போகுதாம்னு சொன்னேன். அவரும்,"ஆமா,எனக்குத் தெரிந்த பங்குத்தரகு நண்பரொருவர் அப்படித்தான் சொன்னார்" என்றார். பின் சில தினங்களில் அவரே, "15ம் தேதி சனிக்கிழமை அல்லவா....விட்டா எல்லா விடுமுறை தினங்களிலும் ஏதாவது இப்படி சொல்வீங்கபோல"ன்னு என்னை கிண்டல் செய்தார்.

இன்று எதிர்பார்த்தபடியே மரண அடி. சென்செக்ஸ் 769 புள்ளிகள் விழுந்தது.

நான் வியாழன்று கணிசமான (வியாபார) பங்குகளை விற்றுவிட்டேன்.

டாட்டா மோட்டர்ஸை சென்ற வியாழன்று ரூ.780க்கு விற்றேன். அது ரூ.690 வரை சென்றது. ரூ.700க்கு BUY ஆர்டர் போட்டேன். என் கணக்கில் பணம் இல்லாததால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இப்போது அது ரூ.701ல் இருக்கிறது. அதை சிறிது எண்ணிக்கையில் வாங்கிப் போடலாம். என் அலுவலக நண்பரொருவர் டாட்டா மோட்டர்ஸை ஃபோர்டின் ஜாகுவார் டீலிங் முடிந்தபின் வாங்குங்கள். அது இன்னும் குறைய வாயிப்பிருக்கிறது என்றார். அவர் சொல்வது மாதிரி டாட்டா ஸ்டீல் கோரஸை வாங்கியபோது நடந்தது.

நாளை பார்க்கலாம். சந்தை எந்த திசையில் பயணிக்கிறது என்று. ஆகஸ்ட் 16,17 ல் நடந்த மாதிரி இரண்டு நாளிலா, அக்டோபர் 17 மாதிரி ஒரு வாரத்திலா அல்லது அடுத்த ஆண்டு பிறக்கும்வரையா இந்த இறக்கம் இருக்கும் என்று.

17.12.2007 பரஸ்பர நிதி

1.டாரஸ் டிஸ்கவரி ஃபண்ட் - ஈக்விடி டைவர்சிஃபைடு ; ஓபன் என்டெட்
சம்பாதித்த லாபம் 1 மாதத்தில் 28%
3 மாதத்தில் 54%
1 வருடத்தில் 114%
நிதியின் மொத்த சொத்து ரூ.34.44 கோடி(30/11/2007ல்)

2.டாரஸ் லிப்ரா டாக்ஸ்ஷீல்ட் - ஈக்விடி டாக்ஸ் ப்லான்னிங்
சம்பாதித்த லாபம் 1 மாதத்தில் 22.78%
3 மாதத்தில் 59%
1 வருடத்தில் 111%
நிதியின் மொத்த சொத்து ரூ.8.62 கோடி(30/11/2007ல்)

ஆனால்,இதில் அதிக ரிஸ்க்(1 ஸ்டார்) எடுக்கத் தயாராய் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம்.

Wednesday, December 12, 2007

12.12.2007 இன்றைய தகவல்

கடந்த 2 மாதமா பரஸ்பர நிதி நிறுவங்களுக்கு ரூ.20,000 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து 16 நிதித் திட்டங்களுக்கு வந்துள்ளதாம். இன்னும் நிறைய திட்டங்களை நிதி நிறுவங்கள் வெளியிட உள்ளனவாம். அதனால்தான் அடிப்படை கட்டுமானம்,ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் உச்சத்திற்க்கு பறக்கின்றன.

லான்கோ இன்ஃப்ராடெக்,ஓமேக்ஸ்,இண்டியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், ரிலையன்ஸின் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராடெக் எல்லாமே நன்றாக உயர்ந்துள்ளன.

பணம் இல்லாவிட்டால் நன்றாக லாபமீட்டாத பங்குகளை விற்று இந்தப் பங்குகளை வாங்கிப்பார்கலாம்.

Monday, December 10, 2007

10.12.2007 சாமான்யனின் மிகக் குறுகிய கால பங்குகள்

இந்த பங்குகளெல்லாம் ஏன் இப்படி விலை ஏறுதுன்னு தெரியல்லே.
கொஞ்ச நாள் வச்சிருந்திட்டு வித்து லாபம் பார்க்கலாம்.

1.பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ்

13 - 11 - 2007 விலை 197.50
10 - 12 - 2007 விலை 283.25
இந்த பங்கு தொடர்ந்து தினமும் 5% Upper Circuit-டை தொடுது. அடிப்படைலயும் நல்ல பங்கு மாதிரி தெரியுது.

2.எஸ்ஸார் ஷிப்பிங்
30 - 11 - 2007 விலை 53.90
10 - 12 - 2007 103. 45
நிர்வாகம் மோசமான நிர்வாகம். எஸ்ஸார் ஸ்டீல dlist பண்ண முயற்ச்சி செய்தாங்க. SAT(Securities Appellate Tribunal)அதை நிறுத்தி வச்சுருக்காங்க.

3.இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ்
23 - 11 - 2007 விலை 39.10
10 - 12 - 2007 71.90


10.12.2007 பரஸ்பர நிதி(Mutual Fund)

நல்ல நிதியை எப்படிக் கண்டுபிடிப்பது?

தொடர்ந்து 5 வருடத்திற்க்கு நல்ல லாபம் கொடுக்கும் நிதியை வாங்கணும்னு சொல்வாங்க.

http://www.valueresearchonline.com ல் ஒவ்வொரு வகையான நிதிக்கும் நட்சத்திர குறீயீடு கொடுத்து எல்லா நிதிகளையும் பட்டியலிட்டு இருப்பார்கள்.அதில் எதாவது ஒரு 5 நட்சத்திர நிதியை தேர்ந்தெடுக்கலாம்.

இப்போதெல்லாம்,முதலீட்டாளர்க்ளின் விருப்பம் அடிக்கடி மாறி வருகிறது.2 மாதங்களுகு முன்பு லார்ஜ் கேப் பங்குகளுக்கு நல்ல மவுசு.இப்போ ஸ்மால்,மிட் கேப் பங்குகளுக்கு நல்ல மவுசு. அதற்க்குத் தக்கவாறு, பரஸ்பர நிதியைத் தேர்ந்த்தெடுக்கணும்.

என்னைப்பொருத்த அளவில் ஒரு வருடம்,6 மாதம்,3 மாதம் என்ற அளவில் எந்த நிதி நல்ல லாபம் தருகிறதோ அதுவே சரியானது.மேலும்,அந்த நிதி முதலீடு செய்திருக்கும் பங்குகள்(அல்லது செக்டார்), அடிப்படையில் நல்ல பங்குகளாக இருக்க வேண்டும்.

இப்போ பங்குச் சந்தையில் பெட்ரோல்,மின்சார மற்றும் அடிப்படை கட்டமைப்பு பங்குகளுக்குத்தான் மவுசு. அதனால், Reliance Diversified Power Sector பண்டுதான் அதில் டாப். மணிகண்ட்ரோல் வலைத்தளதில் மொத்த நிதிகளிலுமே இதுதான் முதலாவது ரேங்க். அதில் அக்டோபர் 5ம்தேதி பணம் போட்டேன்.அப்போது அதன் NAV 61.58(2.25% நுழைவுக்கட்டணம் உள்பட). நேற்று(7.12.2007) அதன் என் ஏ வி 78.22

லாபாம் 78.22 - 61.58 = 16.64*100/61.58 = 27%

அதாவது, 2 மாதத்துக்கு 27% லாபம். வருடத்திற்க்கு 162% . அதாவது இந்த நிதி ஒரு வருடத்திற்க்கு இதே மாதிரி லாபம் தந்தால்!!!!!!

Wednesday, December 5, 2007

05.12.2007 பரஸ்பர நிதி(Mutual Fund)

நம்ம பங்கு வாங்கினா விலை குறையுது.வித்தா விலை கூடுது.இந்த வம்பே வேண்டாம்னு பேசாம பரஸ்பர நிதி பக்கம் போலாம்.முந்தின பதிவில் ஏன் தின வணிகம் பற்றியெல்லாம் வந்ததுன்னு இப்போ புரிந்திருக்கும், பங்கில் நேரடி முதலீடு,தின வணிகம் எல்லாவற்றையும் விட பரஸ்பர நிதியே ரொம்ப நல்லது என்று! என் முதலீட்டில் பெரும்பகுதி பரஸ்பர நிதி, ஃபிராவிடண்ட் நிதி,ஓய்வுகால நிதி போன்றவற்றிலேயே உள்ளது.

பரஸ்பர நிதி நிறுவங்கள் நம் போன்றவர்களிடமிருந்து பணம் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.இந்தியாவில் சுமார் 40 பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன.

ஐசிஐசிஐ பரஸ்பர நிதி,பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ பரஸ்பர நிதி,ரிலையன்ஸ் பரஸ்பர நிதி போன்றவை அதில் சில.ரிலையன்ஸ் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு, அதாவது முதலீட்டாளர்கள் போட்டிருக்கும் முதலீடு ரூ.70,000 கோடிக்கும்மேல். இது சென்ற வருடத்தில் சுமார் 36000 கோடிக்கு இருந்தது. அதாவது, ஒரு வருடத்தில், முதலீட்டாளர்கள் போட்டிருக்கும் பணம் இரட்டிப்பாயிருக்கிறது. பிறகு ஏன் பங்கு சந்தை இப்படி எகறாது?

பரஸபர நிதில யூனிட் வாங்கும்போது பங்கு சார்ந்த நிதிக்கு 2.25 அல்லது 2.5 சதவீதம் நுழைவுக்கட்டணம் இருக்கும். கடன் சார்ந்த திட்டங்களுக்கு அது சுமார் 1 சதவீதம் இருக்கும். முதலில் குறைந்த பட்சம் ரூ.5000 போட வேண்டியிருக்கும். அதன் பின் ரூ.500/1000ன் மடங்குகளில் பணம் போடலாம். ரிலையன்ஸில் ரூ.1ன் மடங்கில் பணம் போடலாம் என்று நினைக்கிறேன்.

யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு(Net Asset Value - NAV):

முதலீட்டாளர்ட்ட வாங்கின பணத்தை பங்குச் சந்தையில போட்டு, அன்றைக்கு அந்த பங்குகளின் முடிவு விலையை மொத்த யூனிட்களால் வகுத்து யூனிட்டின் நிகர மதிப்பை வெளீயிடுவார்கள்.
முதலில் பரஸ்பர நிதியில் ஒரு ஸ்கீம் வெளியிடும்போது ஒரு யுனிட்டின் விலை ரூ.10 என்று தொடங்குவார்கள். உதாரணத்துக்கு, இப்போது அந்த ஸ்கீமிகில் 10,000 யூனிட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஸ்கீமில் உள்ள மொத்த முதலீடு 10,000Xரூ.10=ரூ.1,00,000 இந்த ஒரு லட்சத்தை பரஸ்பர நிதி நிறுவனம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக வை த்துக் கொள்வோம். அந்த பங்குகளின் இப்பொதைய மதிப்பு ரூ.1,25,000 என்று வைத்துக்கொள்வோம். முதலீடு செய்வற்க்கான செலவு முதலியாவற்றை இந்த 1.25 லட்சத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பங்கின் விலை உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் அவர்களின் இந்த செலவு மாறாது! செலவு போக மீதி ரூ.1,23,000 இருப்பதாக வைத்துகொள்வோம்.

இப்போது அந்த ஸ்கீமின்

யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு(NAV) = 1,23,000/10000=12.30
யூனிட்டின் இந்த NAV மதிப்பை மறுநாள் தினசரி பத்திரிக்கைகளில் பார்கலாம். இல்லையெனில் அந்தந்த நிதியின் வலைத்தளத்திலோ,பரஸ்பர நிதி சம்பந்தமாக உள்ள வளைத்தளத்திலோ பார்கலாம்.


பரஸ்பர நிதி வகைகள்:
பரஸ்பர நிதியில் பங்கு சார்ந்த, கடன் சார்ந்த, இரண்டும் சார்ந்த பேலண்ட்ஸ்ட், டைவர்சிஃபைடு போன்ற நிறைய வகைகளிருந்தாலும் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட 2 வகைகள்தான் முக்கியம்.

1.பங்கு சார்ந்த நிதி:முதலீட்டில் பெரும்பகுதி அதாவது 80 - 90 சதவீதம்வரை பங்கு சார்ந்த திட்டங்களில் முதாலீடு செய்வார்கள்.பங்கு சந்தை உயரும்போது யூனிட்டின் மதிப்பும் உயரும்.ப ங்கு சந்தை குறையும்போது யூனிட்டின் மதிப்பும் குறையும். அதிக ரிஸ்க் எடுக்க தைரியம் உள்ளவர்கள் இதில் பணம் போடலாம். வருடத்திற்க்கு 30,40 சதவீதம் என்று லாபம் வரும். பங்கு சந்தை விழும்போது லாபம் குறையும் என்பது சொல்ல வேண்டியதில்லை.


2.கடன் பத்திரங்கள் சார்ந்த நிதி: இந்த மாதிரி நிதித் திட்டங்களில் பெரும்பகுதி அரசுக்கடன் பத்திரங்கள், பெரிய நிறுவனங்களின் வைப்பு நிதி போன்றவற்றில் பணம் போட்டிருப்பார்கள். லாபம் வருடத்திற்க்கு 10,12 சதவீதம் என்று வரும். ஆனல்,முதலுக்கு மோசமில்லை. போட்ட பணம் குறையாது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இதில் பணம் போடலாம்.

பரஸ்பர நிதியில்சேர என்னென்ன் இருக்க வேண்டும்?

பான் அட்டை
இப்போதெல்லம் எதற்க்கும் இருப்பிடச்சான்று கேட்பவர்கள் இதற்க்கும் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஐ சி ஐ சி,கோடக் மஹின்ட்ரா வங்கிகளில் பரஸ்பர நிதிக்கென்று தனியாக கணக்கு துவங்கலாம். யூனிட்டுகள் அதன் வலைத்தளங்களினின்மூலம் எளிதாக வங்க/விற்க்கலாம்.

Friday, November 30, 2007

30.11.2007 பங்கு பரிந்துரைகள்

01.12.2007ம்தேதிய நாணயம் விகடனின் நீண்டகாலத்துக்கான பங்கு பரிந்துரைகள்
லார்ஜ் கேப்

1.ஏசியா ப்ரௌவுன் பவேரி(ABB)
2.ஆக்ஸிஸ் பேங்க்
3.பாரத் ஹெவி எல்க்ட்ரிகல்ஸ்
4.மாருதி சுஸுகி
5.பாரத ஸ்டேட் வங்கி

6.டாடா மோட்டர்ஸ்

மிட் கேப்
1.க்ளேன் ஃபார்மா
2.பாரத் பிஜ்லீ
3.3ஐ இன்ஃபோடெக்
4.ஸ்டெர்லைட் ஆப்டிகல்ஸ்
5.மெட்ராஸ் சிமெண்ட்ஸ்
6.வொக்கார்ட்


ஸ்மால் கேப்
1.இண்டோ டெக் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்
2.திவான் ஹவுசிங்

3.வெசுவியஸ் இந்தியா

Wednesday, November 28, 2007

28.11.2007 சூதாட்டப் பங்குகள்

தலாலின் 26.11.2007ன் சூதாட்டப் பங்குகள்

1. இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ்
2. ஷிவ் வாணி ஆயில் அன்ட் கேஸ் எக்ஸ்ஃப்ளோரேஷன்
3. ஓமக்ஸ்
4. கருட்டூரி நெட்வொர்க்ஸ்
5. பினானி இண்டஸ்ட்ரீஸ்
6. சிண்டிகேட் பாங்க்
7. ஷர்டூல் செக்யுரிடீஸ்
8. கோடே இண்டியா

28.11.2007 குறுகிய கால முதலீடு,பங்கு வணிகம்,சூதாட்டம்

என்னதான் நீண்ட கால முதலீடு என்று பங்கு வாங்கினாலும், குறுகிய காலத்தில் லாபம் பார்க்காமல் மனது பொறுப்பதில்லை.

பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஒரே நாளில் 500,700 என்று கீழிறங்குகிறது / மேலேறுகிறது. நிறைய பங்குகள் காரணமே இல்லாமல் திடீரென கன்னாபின்னாவென மேலேறுவதும் கீழிறங்குவதும், பங்கு வணிகம்(டிரேடிங்) கன ஜோராக நடந்துகொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

ஒவ்வொரு முதலீட்டாளருக்குள்ளும் ஒரு டிரேடர்/சூதாடி இருப்பர். அவர் சீக்கிரம் பணம் பண்ண வேண்டும் என்று நம்மை நச்சரித்துக்கொண்டு இருப்பார். அதையும் முயற்சி செய்து பார்க்கலாமே. லாபமோ நட்டமோ அவரவர் திறமை / அதிர்ஷ்டத்தைப்பொறுத்தது.

என்ன பங்கில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் இப்படி சூதாட இவன் வழி சொல்ரான்னு நினைக்க வேன்டாம். "களவும் கற்று மற" என்ற ஆன்றோர் வாக்கிற்க்கு ஏற்ப நாமும் நடக்கணுமில்லயா? என்னவோ ஆன்றோர் சொல்லி எல்லாம் கேட்ட மாதிரி!

இதற்க்கான காரணத்தை அடுத்து வரும் பதிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

எஸ்ஸார் ஆயில் என்று கேள்வியே படாத பங்கு ஒரே நாளில் சுமார் 12 கோடி பங்குகள் ரூ.2350 கோடி அளவுக்கு வியாபாரமாயுள்ளன என்பதிலிருந்தே டிரேடிங் பெரிய அளவில் போய்கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.அதில் டெலிவெரி சதவீதம் வெரும் 7 தான்.மீதி சதவீதம் வெறும் வணிகம்தான்.

இனிமேல் சூதாட்டத்தை கௌரவமாக தின வணிகம்(ஒரே நாளில் செய்யாமல் சில நாட்களில் வணிகம் செய்தாலும்) என்றே சொல்லிக்கொள்ளலாம்!

வீட்டில் இண்டெர்னெட் தொடர்போ அல்லது ப்ரௌசிங் மையத்தில் டிரேடிங் செய்யும் வசதியோ அல்லது அலுவலகத்தில் வேலை அதிகம் இல்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருந்தால் தான் தின வணிகத்தில் ஈடுபட முடியும். நான் அவ்வபோது செல்லும் ப்ரௌவுசிங் மையத்திற்க்கு ஒருவர் சரியாக காலை 10 மணியளவில் தண்ணீர் பாட்டிலுடன் வந்துவிடுவார். அவர் சந்தை முடியும் நேரம் பிற்பகல் 3:30 மணி வரை இருப்பார். விசாரித்த போது அவருக்கு அதுதான் முழு நேரத்தொழிலாம்.

தின வணிகத்தில் கவனிக்க வேண்டியது

1.நாம் தின வணிக்த்தில் ஈடுபடும் தினத்தன்று எவ்வளவு பணம் இழக்கத்தயாராய் இருக்கிறமோ, அதுவரைக்கும் டிரேடிங்கில் ஈடுபடுவது. உதாரணமாக ரூ.1000 என்று வைத்துக்கொள்ளலாம். நஷ்டம் வந்தால் ரூ.1000உடன் நிறுத்திகொள்ளனும். விட்டதைப் பிடிக்கிறேன் என்று மற்ற நல்ல பங்குகளை விற்று தின வணிகத்தில் ஈடுபடக்கூடாது.

2. தொலைக்காட்சி,இணையதளத்தில் டெக்னிகல் அனலிஸ்ட்கள் சொல்வதை கேட்கலாம் அல்லது www.poweryourtrade.com போன்ற கட்டண வலைத்தளத்தில் உறுப்பினராகச் சேர்ந்துகொள்ளலாம். அவர்கள் அன்றன்றைக்கான தின வணிகப் பரிந்துரையை மிண்ணஞ்சல், குறுந்தகவல்மூலம்உங்களூக்கு அனுப்பிவிடுவார்கள்.

3.குறிப்பிட்ட நிறுவனகளைப் பற்றிய நல்ல/கெட்ட செய்தி வந்தால் அந்த பங்கின் விலை சடாரென ராக்கெட் வேகத்தில் பறக்கும்/விழும். பிரபலமான வாகன உற்பத்தி நிறுவனமான் வால்வோ, அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கப் போகிறது என்ற செய்தியினால் அசோக் லேலண்ட் பங்கு நேற்று 10 சத வீதம் கூடியது. இதேபோல் செய்திகளால் அடிபடும் பங்கில்தான் தின வணிகம் செய்வது நல்லது.

4.முதல் அரை மணி நேரத்திற்க்கு, சந்தையின் போக்கை கவனித்துக்கொள்ள வேண்டும் ஏறுமுகமா, இல்லை இறஙுகுகமா என்று. சில சமயஙளில் முதல் அரை மணி நேரத்திற்குப்பின் பங்கின் போக்கு எதிர்மறையாய்ப் போய்விடும்.

5.தின வணிகத்தில் முதலீட்டில் செய்வதுபோல் அல்லாது,பங்கு ஏறும்போது வாங்க வேண்டும்,இறங்கும்போது விற்க்க வேண்டும்.

6. அதிக எண்ணிக்கையில்(லட்சத்தில்,மில்லியெனில்) பரிவர்த்தனை ஆகும் பங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் (நஷ்டத்தில்) விற்கும்போது பங்கை வாங்க ஆளிருக்கும்!

7. நஷ்டம் தவிர்த்தலை(ஸ்டாப்-லாஸை) கட்டாயமாக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது ரூ.100 விலயுள்ள பங்கை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அது மேலே போகாமல் 95க்கு இறங்குவதாக வைத்துகொள்வோம். இனிமேல் அந்தப் பங்கு மேலேறாது என்று உறுதியா தெரிந்தால் உடனே விற்றுவிடவேண்டும். அதேபோல் அந்த பங்கு மேலேறினால் குறிப்பிட்ட அளவுக்குமேல் ஏறாது. 125க்கு மேல் ஏறாது என்று வைத்துக்கொள்வோம்.120 வந்தவுடன் அது மேலேறுமா என்று கவனித்து அது கீழே இறங்க ஆரம்பித்தவுடன் 108,109 என்று எதவது ஒரு விலையில் விற்றுவிட்டு லாபம் பார்த்துவிடலாம்.

8.தின வணிகம் செய்யும்போது தொடர்ந்து நட்டம் வந்தால், "ச்சீ, இந்தப் பழம் புளிக்கும்" என்று தின வணிகத்துக்க் முழுக்கு போட வேடியதுதான்!







Thursday, November 22, 2007

22.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

நான் வாங்கிய பங்கு : ஹெங்கல் இண்டியா

"ஹெங்கோ ஸ்ட்ரெயின் சேம்பியன்" என்ற டிடர்ஜண்ட் பௌடரை இந்த நிறுவனம்தான் வெளியிடுகிறது. இந்த பங்கிற்க்கு நாணயம் விகடனிலும் பின் எகனாமிக் டைம்ஸிலும் பரிந்துரை வந்தது. ஏப்ரலில் இந்த பங்கை ரூ.23.11க்கு(தரகு,வரிகள் உட்பட) வாங்கினேன். இன்று அதன் விலை 23.

நேற்று முன் தினம் எல்லாப் பங்குகளும் வகை தொகையில்லாமல் விலையேறியபோது இந்தப் பங்கும் 15 சத வீதம் விலை ஏறியது. இந்த மாதிரி பங்குகள் எப்போது விலை ஏறும் என்று தெரியாது. அதற்க்கு வருடக்கணக்கில்கூட ஆகலாம். அவ்வளவுநாள் காத்திருக்க பொறுமையில்லாதவர்கள் இந்த மாதிரி நல்ல விலை கிடைக்கும்போது விற்றுவிட்டு வெளியேறுவதுதான் நல்லது.
இன்னும் என்னிடம் யுனிடெக்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,ரிலையன்ஸ் பெட்ரோலியம் போன்ற நிறைய பங்குகள் இருக்கின்றன.


பங்கை எந்த விலையில் வாங்குவது?
நல்ல பங்கை கண்டுபிடிப்பதுகூட அவ்வளவு சிரமமில்லை. ஆனால், அதன் வாங்கும் விலையை கண்டுபிடிப்பதுதான் மிகவும் சிரமம். நாம் வாங்கியவுடன் விலை குறையும்,விற்றவுடன் விலை கூடும். நம்ம ராசி அப்படி! வாங்கும் விலை தெரிந்தால்தான், அந்தப் பங்கின் விலை குறையும்போது வாங்கி "சராசரி"(ஆவரேஜ்) செய்வதற்க்கு உதவியாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் மொத்த பெறுமான மதிப்பை(Enterprise Value) வைத்து, இன்ன விலைக்கு இந்தப் பங்கை வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுவார்கள். வோடாபோன் நிறுவனம் ஹட்சை வாங்கும்போது அதன் நிறுவன மதிப்பு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்வார்கள். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு பங்கு நிபுணர் சிஎன்பிசியில் இண்டியா சிமெண்ட் ரூ.306 வரை போகும் என்றார். எப்படி இவ்வளவு துல்லியாய் சொல்கிறார். இவரல்லவோ சிறந்த பங்கு நிபுணர் வியந்து போனேன்! இந்தியா சிமெண்ட்ஸின் ஆண்டறிக்கையை படிக்கும்போதுதான் தெரிந்தது, அந்த விலைக்குதான் பின்னாளில் மாற்றத்தகுந்தவாறு கடன் பத்திரங்களை வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர் இண்டியா சிமெண்ட்ஸிடமிருந்து வாங்கியிருக்கிறார் என்று.

சரி பங்கு என்ன விலைக்கு வாங்கலாம் என்று தெரிந்துவிட்டது. உடனே வாங்கிடலாமா? கூடாது.தொடர்ந்து நாம் வாங்கப்போகும் பங்கை கவனித்து வந்தால்தான் அந்தப் பங்கு என்ன அதிக விலைக்கு மேலே போகும்,என்ன குறைந்த விலைக்கு கீழெ வரும்(விழும்) என்று தெரியும். இண்டியா சிமெண்ட்ஸ் 310,320 வரைக்கு மேலே போகும். 260 வரை கீழே வரும். இந்த விலையில் வாங்கலாம் என்று தெரிகிறது.


எத்தனை பங்குகள் வாங்கலாம்?
நீங்கள் மொத்தம் வாங்க நினைத்திருக்கும் எண்ணிக்கையிலான பங்குகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாங்கலாம். அதாவது,உதாரணத்துக்கு, 1000 பங்குகள் வாங்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் அவ்வப்போது சந்தை சரியும்போது 50,100 என்று வாங்கலாம். அல்லது ரூ.5000,ரூ.10000க்கு எந்த எண்ணிக்கையில் பங்கு வாங்க முடியுமோ அந்த எண்ணிக்கையில் வாங்கலாம்.


பங்கை எப்போது விற்க்கலாம்?
நீண்ட கால முதலீட்டாளர்க்கு வாங்கிய பங்கை விற்க்க வேண்டிய அவசியமே இல்லை. அவசியம் நேரும்போது விற்க்க வேண்டும் எனில் அந்தப் பங்கின் விலை அதிகமாய் இருக்கும்போது விற்கலாம். அல்லது, எப்போதும் 2,3 சதவீதம் கூடும் பங்கின் விலை திடீரென 8,10 சதவீதம் கூடினால் அப்போது விற்று, திரும்ப அந்தப் பங்கு குறைந்த விலைக்கு கிடைக்கும்போது வாங்கலாம்.ஆனால்,இந்த மாதிரி விற்ற விலையைவிட குறைந்த விலைக்கு வரும்போது வாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல.

Tuesday, November 20, 2007

20.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

நான் வாங்கிய பங்குகள்:

பி ஹைச் இ எல்(BHEL):

03.04.2007 அன்று
தீபக்கின் ப்ளாக்கில் வந்த ஆய்வுரையின்படி இந்தப் பங்கை வாங்கணும் என்று முடிவெடுத்தேன். பின் மாதக்கடைசியில் ரூ.2495க்கு வாங்கினேன். மே மாத இறுதியில்(என்று நியாபகம்) போனஸ் 10 பங்குக்கு 10 பங்கு கிடைத்தது. அதனால் விலையும் சரிபாதியாய்க் குறைந்தது. அதாவது, வாங்கிய பங்குகள் 20 என்றும், விலை 1250 என்றும் ஆகியது. ஜூன் மாதம் 10 பங்குகளை பங்கொன்றிற்க்கு 1407 என்ற விலையில் வித்தேன். மீதி 10 பங்குகளையும் 1705 என்ற விலையில் வித்தேன்.


லாபம் = 10*(1407 - 1250)+10*(1705 - 1250) = 1570+4550 = 6120

சுமார் 25 சதவீத வளர்ச்சி, அது மிகக் குறுகிய காலத்தில் - 3 மாதத்தில். அதாவது, ஒரு வருடத்தில் பணம் இரட்டிப்பாகிறது. இன்று அப்பங்கின் விலை 2650. விற்க்காமலே வைத்திருந்தால்,வருடத்திற்க்கு 400 சதவீததிற்க்குமேல்.
அடிப்படையில் நல்ல நிறுவனம் என்று தெரிகிறது. பங்கின் விலையும் நன்றாக அதிகரிக்கிறது. அப்புறம் எதற்க்கு விற்க்க வேண்டும்? எல்லாம் லாபம் பார்க்க வேண்டும் என்ற (அற்ப) ஆசைதான். அதற்க்காக அந்தப் பங்கை திரும்பவும் வாங்காமல் விட்டுவிடுவோமா? ஆகஸ்ட் 16ல் பங்கு சந்தை விழுந்தபோது 1615 என்ற விலையில் வாங்கினேன்.
கணிணி முலம் எளிதாக பங்கு வணிகம் செய்பவர்கள்,லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதிரி அவ்வப்போது விற்று லாபம் பார்க்கலாம். இல்லாவிடில் அப்படியே விட்டு வைப்பதுதான் உத்தமம். இப்படி அடிக்கடி விற்று வாங்குவதால் நமக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த பங்கு வணிக வலைதளத்தை நடத்தும் தரகு நிறுவனத்திற்க்கு தரகு மூலம் நல்ல லாபம்!

Monday, November 19, 2007

19.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

நான் வாங்கிய பங்குகள்:

இண்டியா சிமெண்ட்ஸ்:

நாணயம் விகடனில் வந்த பரிந்துரையை வைத்து ஜனவரி முதல் வாரத்தில் ரூ.232க்கு கொஞ்சம் பங்குகளை வாங்கினேன். பிறகு சில நாட்களில் 206க்கு வாங்கினேன். இன்னும் சில நாட்களில் 199க்கு வந்த போது மறுபடியும் கொஞ்சம் பங்குகளை வாங்கினேன். அதற்கப்புறம் அது 166க்கு வந்தபோது நொந்துபோனேன்.

இது அடிப்படையில் மிகவும் நல்ல பங்கு.கடந்த காலாண்டுகளில் நல்ல லாபம் ஈட்டியுள்ளது.செய்திகளின்படி சிமெண்ட் தேவைப்பாடு மிக நல்ல அளவில் இருக்கிறது.அப்படி இருந்தும் ஏன் பங்கின் விலை குறைந்தது?

ஒரு பங்கின் விலை அதன் அடிப்படையை(அதன்பங்கு லாபம்,எதிர்கல வாய்ப்பு) மட்டும் வைத்து முதலீட்டாளர் வாங்குவதில்லை. சிமெண்ட் தேவை பருவ கால மாற்றத்துக்குட்பட்டது. வெயில் காலத்தில் நன்றாகவும் மழைக்காலத்தில் குறைவாகவும் தேவைப்பாடு உள்ள பொருள். சிமெண்ட் விலை கடந்த ஒரு வருட காலத்தில் இரட்டிப்பாகியிருக்கிறது.அதன் விலையைக்கட்டுப்படுத்த வேண்டும் என்று எல்லாரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போதும் சொல்கிறார்கள்.உடனே சிமெண்ட் நிறுவனப் பங்குகளின் விலைகள் குறைந்தன.அதன் விலையை மட்டுப்படுத்தும்பொருட்டு அந்த சமயத்தில் சிமெண்டுக்குஅதிக வரி விதிக்கப்பட்டது. அப்போதும் சிமெண்ட் பங்குகளின் விலை குறைந்தன.ஒரு கட்டத்தில் பங்கின் விலை 160க்கு வந்தது. அப்போது ஏதோ ஒரு நிறுவனம் நிறைய எண்ணிக்கையில்(லட்சக்கணக்கில்) இந்த நிறுவனப் பங்குகளை வாங்கினார்கள். இதை ப்ளாக் டீல் என்கிறார்கள். இந்த விபரங்களையும் இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம். அந்த மாதிரி நிறுவனங்கள் நம்மைப்போல் சாதாரணமான் முதலீட்டாளர்கள்போல் கிடைத்த விலைக்கு எந்தப் பங்கையும் வாங்க மாட்டர்கள்.ஒரு பங்கு இவ்வளவு பெறும் என்று கணக்கிட்டு வாங்குவார்கள்.அதனால் பங்கின் விலை குறைந்தது.

அப்புறம் முதல் காலாண்டு முடிவு அறிவிக்கப்பட்டவுடன் பங்கின் விலை கூடியது. 2வது காலண்டு முடிவு அறிவிக்கப்படும்முன் பங்கு விலை 316வரை போனது.சில வாரங்களில் அது 260க்கு வந்தது. இப்போது(19அக்டோபர்2007) 311க்கு வந்து விட்டது.

அதனால் இப்பொதெல்லாம் விலை குறையும்போதெல்லாம் 10,30 என்று இந்த பங்கை வாங்குகிறேன்.

Sunday, November 11, 2007

12.11.2007 பங்கு வதந்தி

தலால் ஸ்ட்ரீட் வதந்தி

ஷக்தி பம்பின் பங்கு விலை கன்னாபின்னாவென்று ஏறுமாம்.ஏற்றபபடும் என்பதுதான் சரி =)

11.11.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க.

பங்கு வாங்கணும்னு முடிவு பண்ணியாச்சு.

நான் நாணயம் விகடனில் "ரூ.2000-ல் பங்கு வாங்குவது எப்படி?" என்பதைப் பார்த்துத்தான் பங்கு வாங்க ஆரம்பித்தேன்.

டீமேட் எண் வாங்குவதற்க்கு ரூ.500மீதி 1500க்கு ரூ.10 விலையுள்ள 150 பங்குகள் வாங்கலாம். இது புதியதாக பங்கு சந்தையில் நுழைபவர்க்கு, பங்கு வாங்குவது எப்படி?" என்ற அறிமுகம் கொடுத்த அளவில் சரி.

ஐசிஐசிஐ,ஷேர்கான்,ரிலையன்ஸ் போன்றவைமூலம் டீமேட் கணக்கு தொடங்கலாம். அதற்க்கு பான் அட்டையும், வங்கிக்கணக்கும் அவசியம்.

என்ன பங்குகளை வாங்குவது?
தினத்தந்தி,நாணயம் விகடன் போன்றவற்றில் வரும் பங்கு பரிந்துறைகளை சிஃபி.காம், மணிகண்ட்ரோல் போன்ற பங்கு சம்பந்தமாக உள்ள தளங்களில் நமது பெயரில் ஒரு அக்கௌண்ட் திறந்து அதில் இந்த மாதிரி பங்குகளின் தகவல்களை-விலை,தேதி போட்டு வைத்துக்கொள்ளலாம் .

ஒரு 3 அல்லது 6 மாதங்கள் கவனித்து வந்தால் அதில் எந்த பங்கை வங்குவது என்பது புரியும்.

நான் ஷேர்கானில் புதிதாக டீமேட் கணக்கு தொடங்குவதற்க்காக மே 2006ல் அங்கு ஒருவரைச் சந்தித்தேன். எவ்வளவு குறைந்த அளவு பங்கு வாங்கினாலும் ரிலையன்ஸ் போன்ற அடிப்படையில் நன்றாக உள்ள பங்கை வாங்குமாறு சொன்னார்.அப்போது அப்பங்கின் விலை சுமார் 1000. இப்போது அதன் விலை ரூ.2734 =)


எப்போது வாங்குவது?
மார்க்கெட் ஒவ்வொரு 2 அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது காரணத்தினால் விழும். கடைசியாக அக்டோபர் 17ம் தேதியன்று "பங்கேற்ப்பு ஆவணத்திற்க்கான" செபியின் அறிவிப்பால் விழுந்தது.

ஆகஸ்ட் 16,17 தேதிகளில் பங்குச் சந்தை வ்ழுந்ததுபோது சில பங்குகளில் முதலீடு செய்தேன். அதில் ஒரு பங்கைத்தவிர மற்ற பங்குகள் அனைத்தும் 50 சதவீதத்துக்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளன. அந்த ஒரு பங்கு(ஏர்டெல்)கூட இப்போது அலைபேசி நிறுவனங்களுக்குள்ள பிரச்னையினால்தான் குறைந்தது.

Wednesday, November 7, 2007

07.11.2007 மதிப்புகூடும் ரூபாயால் ஏற்றுமதி தொழிலில் உள்ள தொழிலளர்கள் வேலை இழப்பு.....

சிஎன்பிசி டிவியில் சிதம்பரம் சொல்லிக்கொண்டிருந்தார் "ஏற்றுமதியாளர்கள் மதிப்புகூடும் ரூபாயுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும்" என்று.

மதிப்புகூடும் ரூபாயால் ஏற்றுமதி (ஆயத்த ஆடை போன்றவை) வியாபாரத்தில் உள்ள இலட்சக்கணக்காணவர்கள் வேலை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றுக்கும் வரி போடும் நம்ம நிதி அமைச்சர் சிதம்பரம் மூட்டை மூட்டையாய் டாலரை பங்கு வணிகத்தில் கொட்டும் அன்னிய முதலீட்டர்களிடம் இதற்க்கும் வரி விதிக்கலாம். ஆனல், அவர் வரி போட மாட்டார் . ஏனெனில் அப்புறம் முதலீடு நம் நாட்டிற்க்கு வராது.

பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து ஸ்டாம்ப் வரி(ரூ.100க்கு 16 பைசா என்று நினைவு) மூலமாக அரசுக்கு ஆயிரக்கணக்காண கோடி ரூபாய் கிடைகிறதாம்.அப்படியே மதிப்பு கூடும் ரூபாய்க்கும் ஒரு வரி போடலாம்.

Tuesday, November 6, 2007

06.11.2007 வாங்க, பங்கு வாங்கலாம் வாங்க!

இப்போது நகரத்தில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் சிற்றூர்களில் உள்ளவர்கள்கூட பங்கு வணிகம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் தினத்தந்தி,தினமலர்,நாணயம் விகடன் போன்ற பத்திரிக்கைகளின் உதவியால்.

என்னுடன் வேலை செய்பவர்களுடன்(கணிணித்துறை) பேசும்போது எல்லோருக்கும் பங்கு வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உள்ளதென்பது தெரிகிறது. ஆனால்,நட்டமாகி விடுமோ என்ற பயத்தில் பெரும்பாலனோர் இதில் நேரடியாக ஈடுபடுவதில்லை. பரஸ்பர நிதி மூலமாக ஈடுபடுகிராற்கள்.

குறைந்த அளவுகூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பங்கு வணிகத்தில் நேரடியாக மட்டுமில்லாது மறைமுகமாகக்கூட(பரஸ்பர நிதி) ஈடுபடுவது கூடாது. அதாவது,"அய்யோ இன்னைக்கு ரூ.100 போச்சே" என்று நெஞ்சைப் பிடிப்பவர்கள், பணத்தை வங்கி சேமிப்பு நிதியில் போட்டுவிட்டு நிம்மதியாய் இருக்கணும்.

மங்களூர் சிவா தன் "மார்கெட் ஜோக்" பதிவில் சொன்ன மாதிரி, இனிமேல் பங்கு வணிகத்தில் ஈடுபட "பான்" அட்டையுடன் ஒருத்தர் அவருடைய ஈசிஜி, கார்டியாக் அறிக்கையயும் தாக்கல் செய்யச் சொல்லணும் =)

முதல் முதலாக பங்கு வணிகத்தில் ஈடுபட விரும்புபவகர்கள் தினமும் தினத்தந்தி, நாணயம் விகடன் படித்து பங்கு வர்த்தகத்தைத் தொடர்ந்து கவனித்து வந்து நம்பிக்கை வந்தபின் ஈடுபடலாம்.

பங்கு வணிகம் பற்றி தமிழில் வந்துள்ள நூல்களைப் படிக்கலாம்.
செல்லமுத்து குப்புசாமியின் "இழக்காதே"
சோம.வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்"

Thursday, November 1, 2007

01.11.2007 வருக! வருக! என் முதல் பதிவு

கடந்த ஒரு வருடமாக ப்ளாக் ஆரம்பிக்கனும் நினைச்சது "அம்மாவின்"(இறை)அருளால் இன்று நடந்துள்ளது. எதைப்பற்றியும் எழுதத்தெரியாததால் என்ன எழுத என்று தயக்கத்தில் பதிவெழுத இவ்வளவு நாளாயிற்று. எனக்கு கொஞ்சூண்டு தெரிந்த பங்கு வணிகத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்து ஆரம்பிச்சாச்சு.

Om sakthi ammave Saranam

ஓம் சக்தியே! பராசக்தியே!
ஓம் சக்தியே! ஆதி பராசக்தியே!
ஓம் சக்தியே! மருவூர் அரசியே!
ஓம் சக்தியே! ஓம் வினாயகா!
ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!
ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமட்சியே!