Tuesday, November 6, 2007

06.11.2007 வாங்க, பங்கு வாங்கலாம் வாங்க!

இப்போது நகரத்தில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் சிற்றூர்களில் உள்ளவர்கள்கூட பங்கு வணிகம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் தினத்தந்தி,தினமலர்,நாணயம் விகடன் போன்ற பத்திரிக்கைகளின் உதவியால்.

என்னுடன் வேலை செய்பவர்களுடன்(கணிணித்துறை) பேசும்போது எல்லோருக்கும் பங்கு வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உள்ளதென்பது தெரிகிறது. ஆனால்,நட்டமாகி விடுமோ என்ற பயத்தில் பெரும்பாலனோர் இதில் நேரடியாக ஈடுபடுவதில்லை. பரஸ்பர நிதி மூலமாக ஈடுபடுகிராற்கள்.

குறைந்த அளவுகூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பங்கு வணிகத்தில் நேரடியாக மட்டுமில்லாது மறைமுகமாகக்கூட(பரஸ்பர நிதி) ஈடுபடுவது கூடாது. அதாவது,"அய்யோ இன்னைக்கு ரூ.100 போச்சே" என்று நெஞ்சைப் பிடிப்பவர்கள், பணத்தை வங்கி சேமிப்பு நிதியில் போட்டுவிட்டு நிம்மதியாய் இருக்கணும்.

மங்களூர் சிவா தன் "மார்கெட் ஜோக்" பதிவில் சொன்ன மாதிரி, இனிமேல் பங்கு வணிகத்தில் ஈடுபட "பான்" அட்டையுடன் ஒருத்தர் அவருடைய ஈசிஜி, கார்டியாக் அறிக்கையயும் தாக்கல் செய்யச் சொல்லணும் =)

முதல் முதலாக பங்கு வணிகத்தில் ஈடுபட விரும்புபவகர்கள் தினமும் தினத்தந்தி, நாணயம் விகடன் படித்து பங்கு வர்த்தகத்தைத் தொடர்ந்து கவனித்து வந்து நம்பிக்கை வந்தபின் ஈடுபடலாம்.

பங்கு வணிகம் பற்றி தமிழில் வந்துள்ள நூல்களைப் படிக்கலாம்.
செல்லமுத்து குப்புசாமியின் "இழக்காதே"
சோம.வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்"

3 comments:

மங்களூர் சிவா said...

thanks for free advertisement

:-))))))))

Shady said...

உங்கள் ப்ளாகை வாசித்தேன் .
மிக நன்று. மேலும் தொடர வாழ்த்துக்கள்....

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க shady