Wednesday, November 7, 2007

07.11.2007 மதிப்புகூடும் ரூபாயால் ஏற்றுமதி தொழிலில் உள்ள தொழிலளர்கள் வேலை இழப்பு.....

சிஎன்பிசி டிவியில் சிதம்பரம் சொல்லிக்கொண்டிருந்தார் "ஏற்றுமதியாளர்கள் மதிப்புகூடும் ரூபாயுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும்" என்று.

மதிப்புகூடும் ரூபாயால் ஏற்றுமதி (ஆயத்த ஆடை போன்றவை) வியாபாரத்தில் உள்ள இலட்சக்கணக்காணவர்கள் வேலை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றுக்கும் வரி போடும் நம்ம நிதி அமைச்சர் சிதம்பரம் மூட்டை மூட்டையாய் டாலரை பங்கு வணிகத்தில் கொட்டும் அன்னிய முதலீட்டர்களிடம் இதற்க்கும் வரி விதிக்கலாம். ஆனல், அவர் வரி போட மாட்டார் . ஏனெனில் அப்புறம் முதலீடு நம் நாட்டிற்க்கு வராது.

பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து ஸ்டாம்ப் வரி(ரூ.100க்கு 16 பைசா என்று நினைவு) மூலமாக அரசுக்கு ஆயிரக்கணக்காண கோடி ரூபாய் கிடைகிறதாம்.அப்படியே மதிப்பு கூடும் ரூபாய்க்கும் ஒரு வரி போடலாம்.

No comments: