Friday, December 21, 2007

21.12.2007 இன்றைய தகவல்

15ஆம் தேதித்க்குப்பின் சந்தை இறங்கும் என்று செய்திகளில் சொல்லப்பட்டபடியே சந்தை ஒரே நாளில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்கிறது.
இப்படித்தான் தீபாவளிக்கு முன்பும் சொன்னார்கள். சந்தை இறங்கியது. தீபாவளி முடிந்ததும் ஒரே நாளில் சென்செக்ஸ் 900 புள்ளிகளூக்குமேல் தாண்டியது. அதாவது, தீபாவளிக்குப்பின் குறையும் என்று கையில் பங்கு இல்லாமலே விற்று(short selling) வைத்தார்களாம். பின் சந்தை எதிர்பார்த்த அளவு விழாது என்றவுடன் விற்ற பங்கையே வாங்கி(short covering) கணக்கை நேர் செய்தார்களாம்.


இவர்கள் சந்தை இப்படித்தான் போகும் என்று ஆருடம் சொல்வதைவிட இப்படித்தான் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்கேற்றார்போல் பங்குகளை வாங்கியோ விற்றோ லாபம் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.

டாட்டவுக்கு ஃபோர்டின் ஜாகுவார்,லேண்ட் ரோவர் விற்பனை பற்றிய அறிவிப்பு திங்களன்று வருமாம். ஆனல்,அதிகரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 2வது வாரத்தில்தான் வருமாம். இப்போது டாட்டா மோட்டர்ஸின் பங்கு விலை ரூ.705ல் இருக்கிறது. கொஞ்சம் பங்குகளை வாங்கியிருக்கிரேன்.

மத்திய அரசின் MRTPC அமைப்பு 1990ல் சிமெண்ட் நிறுவங்கள் தமக்குள் பேசி வைத்துக்கொண்டு விலையை கூட்டினவாம் !!!! இது பெரிய கண்டுபிடிப்பு. 18 வருடங்களில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் அந்த நிறுவங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். இது ஒரு எச்சரிக்கை. அவ்வளவே. சாதாரணமா இந்த மாதிரி அறிவிப்புகள் வந்தால் சிமெண்ட் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 10% வரை குறையும். ஆனால்,இபோது அப்படி எதுவும் நடக்காது என்று நம்பலாம்.

இப்போது மிட்கேப்,ஸ்மால்கேப் பங்குக்குத்தான் இப்போது கிராக்கி. கேப்பிடல் கூட்ஸ் பங்குகளுகு அவ்வளவு கிராக்கி இலை. பி ஹச் இ எல்லின் பங்குகள் ரூ.2371ல் இருக்கிறது. இதற்க்குமேல் கீழிறங்கும்னு தோணலை.வாங்க நினைத்திருந்தால் வாங்கலாம்.

மத்திய அரசு, அரசு நிறுவனங்கள் தன்னிடம் உள்ள உபரி நிதி மொத்த முதலீட்டை விட 3 மடங்கு அதிகமாக இருந்தால் அதற்க்கு முதலீட்டாளர்க்கு போனஸ் பங்கு கொடுக்கச் சொல்லியிருக்காங்க. எல்லா அரசு நிறுவங்களூம் 20,30 மடங்கு என்றூ உபரி நிதி வைத்திருக்கிராற்களாம். அதனால்,இந்தப்பங்குக்கும் போனஸ் கிடைக்கலாம்.

எஸ்ஸார் ஷிப்பிங்க் என்று ஒரு பங்கு 4 வாரங்களுக்குமுன் ரூ.50 என்ற அளவில்இருந்தது. அப்போது வாங்கப் பணம் இல்லை. இப்போது, அந்தப்பங்கு ரூ.124ல் இருக்கிறது.

இவ்வளவு களேபரத்திலும் பிரகாஷ் இண்டஸ்ட்ரியின் பங்கு கீழே விழவேயில்லை.

No comments: