Wednesday, January 9, 2008

09.01.2008 இன்றைய தகவல்

நேற்று சென்செக்ஸ் 21000 தாண்டிவிட்டுச் சென்றது.இதுநாள்வரை,வெளிநாட்டு முதலீடுகளால்தான் சென்செக்ஸ் புள்ளி அதிகரிக்கும். ஆனால், இந்த முறை அதிகரிப்பு,இந்திய முதலீட்டாளர்களாலேயே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 2 மாதங்களாக உயரே ஏறிய ஸ்மால்,மிட்கேப் பங்குகள் நேற்றிலிருந்து குறைய ஆரம்பித்துள்ளன. 127 பங்குகள் 'பி' குழுவிலிருந்து "டி" குழுவிற்க்கு "செபி"யால் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நிறைய பங்குகளின் Circuit Filter 20%-லிருந்து 5ஆகக் குறைந்துள்ளது.

வரப்போகும் ரிலையன்ஸ் பவர்,ஃபியூச்சர் ஆகியவைகளின் ஐபிஒ-க்காக எல்லோரும்நேற்று பங்குகளை விற்றிருக்கிறார்களாம். அதனால்தான்,நேற்று பெரும்பாலான பங்குகள் விலை குறைந்ததாம்.

ஜெயப்பிரகாஷ் ஹைட்ரோ:
எனக்கு ஐபிவோ-வில் ரூ.32க்கு மார்ச் 2005-ல் கிடைத்தது. விலை ரூ.25க்கும் கீழே போனது. சலித்துப்போய் ரூ.30கு விற்றுவிட்டேன். நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் ரூ.70க்கு வாங்கினார். நானும் ரூ.97க்கு வாங்கினேன். அதனுடைய இன்றைய விலை ரூ.136 .

3 comments:

மங்களூர் சிவா said...

ஐயா ராசா உங்க ப்ளாக் பேரு தமிழ் மணம்ல வருது!!

ஓம் சக்தி அம்மாவே வணக்கம் எல்லாம் இன்னைக்குதான் வருது!!

All the best -ங்கோ

மங்களூர் சிவா said...

என்னாது பதிவை பத்தி கமெண்ட்டா?

அப்பாலிக்கா படிச்சிட்டு வரேன்
வர்ட்டா

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க மங்களூர் சிவா,
ஆமாங்க.தெரியப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி.

மெதுவா வாங்க.