Tuesday, February 5, 2008

05.01.2008 பரஸ்பர நிதி

நம்ம ஆளுங்க பங்குச் சந்தையிலோ, பரஸ்பர நிதியிலோ எதையாவது வாங்கிட வேண்டியது. அப்ப பார்க்க பங்குச்சந்தை குப்புர விழும். அப்புரம், வருத்தப்பட்டு என்ன பிரயோசனம். இங்க பாருங்க டயலாக்க.
2007 டிசம்பர் மாத இறுதியில் ரொம்பவும் பிஸியான (அதாவது, மின்னஞசல் அனுப்பினா அதில விஷயம் இல்லைனா பதிலெல்லாம் போட மாட்டார்) நண்பர் எனக்கு போன் செய்தார். அவருக்கு பங்குகள்/பரஸ்பர நிதி போன்ரவற்றில் நாட்டம் கிடையாது. ரியல் எஸ்டேட்தான் அவருடைய குறி.
நண்பர் : சிவா, கையில கொஞ்சம் பணம் இருக்கு.பரஸ்பர நிதியில போடலாம்னு இருக்கேன். 1 வருடம் கழித்து பணத்தை எடுத்திடுவேன்.

நான் : வங்கி வைப்பு நிதில போடு. பரஸ்பர நிதில போடனும்னா கடன்சார்ந்த நிதில 8 லிருந்து 10 சதம்வரை லாபம் கிடைக்கும். பரஸ்பர நிதில கிடைக்கற டிவிடெண்ட்க்கு வருமான வரி கிடையாது.

நண்பர் : அதுக்கு பேசாம நான் வங்கி வைப்பு நிதிலேயே போட்ருவேனே.

நான் : ஹைப்ரிட் பங்குகள்ள போட்டா 15 சதம் வரை லாபம் கிடைக்கும்.

நண்பர் : இந்த பாலன்ஸ் பண்ட்....

நான் : உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?

நண்பர் : நான் வங்கியில் வைப்பு நிதியில போடச் சென்றேன். அங்கிருந்த ஒருவர் பேலன்ஸ் ஃபண்டில் போடச்சொன்னார். வருடத்துக்கு 60 சதம்வரை பரஸ்பர நிதில லாபம் கிடைக்கும்.

நான் : ஏன் 60 சதம், 140 சதவீதம் லாபம் தர்ர நிதியெல்லாம் இருக்கு.

நண்பர்:பரஸ்பர நிதில போட்டா, முதலுக்கு ஒண்ணும் மோசம் இல்லயே? லாபம் வேணா குறையும். அப்படித்தானே?

நான் : அப்டின்னு உனக்கு யார் சொன்னது? பரஸ்பர நிதி பணத்தைக் கொண்டுபோய் பங்குச் சந்தைலதான போடப்போரான். பின் எப்படி நீ செய்யும் முதலீடு குறயாமல் இருக்கும்?
நண்பர் : அப்படின்னு அவந்தான்(வங்கியில் சந்தித்த நபர்) சொன்னான்.
நான் : சரி, நீ உன் கையில் உள்ள பணத்தை, பரஸ்பர நிதில போட்டுத்தான் ஆகணும்னா, ஒரு 5 நாள் பொறு . நான் ஊருக்குத் திரும்பி வந்ததும் என்னன்ன பேலன்ஸ்ட் ஃபண்டு இருக்குன்னு, அதற்க்குன்னு உள்ள வலைத்தளத்தைப் பார்த்து சொல்ரேன்.

இரண்டு நாள் கழித்து(01.01.2008) அதே நண்பரிடமிருந்து ஃபோன்.


நண்பர் : பணத்தை பேலன்ஸ்ட் நிதில போட்டுட்டேன்.

நான் : விண்ணப்ப படிவம்லாம் எங்க வாங்கினே?

நண்பர் : ஏற்க்கனவே சொன்னேனே.(வங்கில பார்த்த நண்பர்) அவந்தான் எல்லாம் கொடுத்தான்.
அந்தப்பணத்தை எதிலும் முதலீடு செய்யாமல் பல மாதங்களாக அப்படியே வைத்திருந்தேன்.

நான் : அப்படினாச் சரிதான். முடிஞ்சா எந்தந்த நிதில் போட்ருகேன்னு விவரமா சொல்லு. அவசரம் இல்ல. மெதுவா சொல்லு. நான் அவதானித்து அதுல எவ்ளோ லாபம் / நஷ்டம்னு சொல்ரேன்.

(மனதுக்குள்) இவ்ளோ நாள் பொறுத்தவன் இன்னும் ஒரு 4 நாள் பொறுக்கக்கூடாது?. இன்னும் 4 நாட்களில் பரஸ்பர நிதியில முதலீடு செய்தால் பிடிக்கப்படும் ந்ழைவுக்கட்டணம்(சும்மார் 2.5%) கிடையாது. அதெல்லாம் இவனுக்குத்தெரியாது. சொன்னாலும், அவனுக்கும் மனசு ரொம்ப கஷ்டப்படும்.

10 நாள்கள் கழித்து நண்பருக்கு ஃபோன் செய்தால் ஒரு பதிலும் இல்லை. சரி, மின்னஞ்சல் அனுப்பினால் , தான் அமெரிக்காவில் இருப்பதாக பதில்.


நான்(மனசுக்குள்) : நண்பன் அமெரிக்கவிலிருந்து வருவதற்க்குள் எப்படியும் 1 மாதம் ஆகும். அதற்க்குல்ல பங்குச்சந்தை பழயபடிக்கு மேல வந்திடும். அப்போ, அவருடைய ஃபோர்ட்போலியோ எவ்ளொ லாபம்/நஷ்டம்னு பார்த்து நண்பர்ட்ட சொன்ன போதும். அவருக்கு மனசுக்கு கஷ்டம் இருக்காது.

23 - ஜனவரி - 2008ல் நண்பர்னிடமுத்து ஃபோன்.

நான் : என்ன,அதுக்குள்ளாறவா திரும்ம்பிட்டே?

நண்பன் :ஆமாம்,போன வேலை முடிஞ்சிருச்சு. என்ன, நம்ம பரஸ்பர நிதியெல்லாம் எப்படி இருக்கு?

நான் : பங்குச்ச்சந்தை கொஞ்சம் டல். அவ்ளோதான்.அதனால பரஸ்பர நிதிலேல்லாம் தாக்கம் ஒண்ணும் ரொம்ப இல்ல.

மறுபடியும் ஒரு 10 நாள் கழித்து ஃபோன்.

நண்பர் : என்ன பங்குச்சந்தை ரொம்ப அடி பொல இருக்கு. டிவில செய்தில சொல்ரான்.

நான் : ஆமாமா. இன்னும் 2 மாதத்துக்கும்மேல ஆகும், கீழே விழுந்த பங்குச்சந்தை மேலே வர. அதுவரைக்கும் பொறுக்க வேண்டியதுதான். அப்படி மேல வந்ததும் நான் உனக்குச் சொல்ரேன்.

எனக்கு மனதில் ஒரு திருப்தி - "அப்பாடா, நான் ஒண்ணும் நண்பரை இந்த பரஸ்பர நிதியில் போடுன்னு சொல்லல".

2 comments:

மங்களூர் சிவா said...

என்னத்த சொல்ல
:(

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க மங்களூர் சிவா.