Wednesday, February 27, 2008

27.02.2008 இன்றைய பங்குத் தகவல்

நேத்து ரயில்வே பட்ஜெட்னால சென்சென்க்ஸ் அதிகமாச்சாம். ஆனால்,வெள்ளிக்கிழமை தாக்கலாகபோற பட்ஜெட்னால, கம்பெனிகள் மகிழ்ச்சியடையும்படி ஒண்ணும் இருக்காதாம். இந்த பட்ஜெட் வரப்போர நாடாளுமன்ற தேர்தல மனசுல வச்சு தயாரிக்கப்படுமாம். அதனால், பங்குச்சந்தைக்கு வெளிநாட்டு முதலீடு அதிக அளவில் வராதாம். அதனால, பங்குச் சந்தை இப்போதைக்கு உயர்ரதுக்கு வாய்ப்புள்ளயாம்.
ஜனவரில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.17000 கோடிக்கு பங்கை வித்தாங்களாம். பிப்ரவரில ரூ.5000 கோடிக்கு வாங்கி "சராசரி" செய்தாங்களாம்.

இந்த வருடம் 2008ல "தனியார் ஈக்விடி"(Private Equity) செஞ்ச முதலீட்ல 30 சதவீதத்துக்குமேல நஷ்டம் ஆயிடுச்சாம்.

எந்தப்பத்திரிக்கைய எடுத்தாலும் சென்செக்ஸ் 16000க்கு பக்கத்துல வரும்னு சொல்ராங்க. அது அப்படி வருமோ வராதோ, இந்த மாதிரி செய்திகளப் படிச்சுட்டு சில்லறை முதலீட்டாளர்கள் எல்லாரும் விக்க ஆரம்பிப்பாங்க. அப்ப சென்செக்ஸ் 16,000க்கு வந்துடும் ==)))

4 comments:

மங்களூர் சிவா said...

நாங்களும் புள்ளி கமா எல்லாம் பின்நூடமா போடலாமா?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஏதாவது பண்ணுங்க. படிக்கிறவங்களுக்கு புரியறமாதிரி =)))

GANESH PL said...

சிவா,
சரியாக சொல்லியுள்ளீர்கள், எல்லோரும் பயத்தில் விற்க ஆரம்பித்தால் 16000 என்ன அதற்க்கு கீழேயும் செல்லும், பார்ப்போம் இந்த மாதம் சந்தை எப்படி இருக்கிறதென்று,... தங்களின் SHAREKHAN SERVICE எப்படி, BROKERAGE PLAN எப்படி, அதில் தங்களின் அனுபவத்தை சொல்லவும்..... நன்றி....

GANESH PL said...

சிவா,
சரியாக சொல்லியுள்ளீர்கள், எல்லோரும் பயத்தில் விற்க ஆரம்பித்தால் 16000 என்ன அதற்க்கு கீழேயும் செல்லும், பார்ப்போம் இந்த மாதம் சந்தை எப்படி இருக்கிறதென்று,... தங்களின் SHAREKHAN SERVICE எப்படி, BROKERAGE PLAN எப்படி, அதில் தங்களின் அனுபவத்தை சொல்லவும்..... நன்றி....